இன்றைய நவீன உலகில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் ஏராளம். மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் பொருட்களால் இயற்கையும், சுற்றுச்சூழலும் மிக வேகமாக மாசுபட்டு வருகின்றன. இதுவே, பல்வேறு நோய்களுக்கும் காரணமாக அமைகின்றன. இதன் காரணமாகவே, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டில் கூட, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கூட, பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான பரப்புரைகளும், விழிப்புணர்வுகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வந்திருப்பதுதான் நான் ஓவன் எனப்படும் துணி போன்ற காகிதங்கள். இவை பார்ப்பதற்கு பிளாஸ்டிக் போன்றே அழகாகவும், பல வண்ணங்களிலும் காட்சிகளிக்கின்றன. பயன்படுத்துவதற்கு காகிதம் போன்றும், துணி போன்றும் இலகுவாக உள்ளன. இவை, பார்ப்பதற்கு துணி போன்று இருந்தாலும், பருத்தியை பயன்படுத்தி நூல்களால் நெய்யப்படுவது இல்லை. பாலி புரொப்பலீன் என்ற வேதிப் பொருளால் இவை தயாரி...
Comments
Post a Comment